Sunday 30 October 2016

சர்க்கரை நோயாளிக்கு வேர்க்கடலை நல்லது

வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், புரத சத்தும் உள்ளன. சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற நல்ல உணவாகும். இதிலுள்ள சர்க்கரையின் அளவு மிக குறைவு. இதில் இருக்கும் மெக்னீசியம், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். எனவே சர்க்கரை நோயாளிகள், வேர்க்கடலையை தைரியமாக சாப்பிடலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும். இதில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்.

இதில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற உயிர் வேதிப்  பொருட்கள் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் உருவாகாமல் தடுக்கும். வேர்க்கடலை நார்ச் சத்து மிகுந்த உணவு என்பதால், சாப்பிட்டால் மலச் சிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். அதில் நிறைய சத்துக்கள் உள்ளன. வேர்கடலையைப் பச்சையாக சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.

இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, ஆரோக்கியமுள்ள  எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். வேர்க்கடலையில் இருக்கும் சில வேதி பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்து விடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்று உருவாகாமல் தடுக்கிறது. பார்க்கின்ஸன், அல்சீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது. உடல் அழகும் இதய பாதுகாப்பும் வேர்க்கடலையில் உள்ள நியாசின், தோளில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும் இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன் பளபளப்பான தோலையும் ஏற்படுத்தி தருகிறது. படிக்கும் மாணவ, மாணவியர், வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள் உணவு ஆய்வாளர்கள்.

வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதி பொருட்கள், நரம்பு செல்களை நன்கு செயல்படத்தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கின்ஸன், அல்சீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. வேர்க்கடலையில் 30 வீதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இதில் புரதம் அதிகம். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்தோ வருதோ சாப்பிடவும், எண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

நெல்லிக்கனி தின்றால் வாய்புண் நீங்கும்

சங்க காலம் தொட்டே, நெல்லிக்கனி வாழ்வில் கலந்து விட்ட ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்ததில் இருந்து, பல புலவர்கள் நெல்லிக்கனியை பற்றி பாடியுள்ளனர். முதுமையை தடுக்கும் குணம், நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அனைவரும் அறிந்த உண்மை. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என நிரூபித்துள்ளனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது.

ஆன்டி ஆக்சிடன்ட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோயிலிருந்து உடலை காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும். கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் வாய் இனிப்பாக இருக்கும். அதிக தூரம் பயணத்தின்போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது.

மற்ற எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் தாது உப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சாது அதிகமாக உள்ளது. ஆப்பிளை விட மூன்று மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட். நார்ச்சத்து இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காமப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு, கொதிக்க வைத்து ஆற வைத்து வாய் கொப்பளித்து வந்தால், வாய்புண் தீரும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி. யாக, 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நெல்லி வற்றல் பச்சை பயறு வகைக்கு, 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு, 200 மி. லி. யாக காய்ச்சி வடித்து, 100 மி. லி. என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லி இலைகளை நீரில் ஊற வைத்து, கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண் நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபலா சூரணம் செய்து காலையும் மாலையும் வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால், நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

Monday 4 January 2016

ஒற்றைத் தலைவலி - மைக்ரேன்


சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு பொடித்து எடுத்துக்கணும். ஒரு தேக்கரண்டி பொடியில் கால் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

மஞ்சள் காமாலை

கீழாநெல்லி சாறு ரொம்ப ரொம்ப நல்லது. அதோட மஞ்சள் கரிசாலங்கண்ணி சாறு எடுத்து குடிங்க. அன்னாசிப்பழச் சாறு எடுப்பது ரொம்ப முக்கியம். மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி, மிளகு, மஞ்சள் இதையெல்லாம் மோரில் கலந்து சாப்பிடனும். எண்ணை சேர்க்காத கஞ்சி, பழங்கள் எடுங்க. நெல்லிச் சாறு + தேன் கலந்து சாப்பிட்ட மஞ்சள் காமாலை நேரத்தில் வரும் உணவின் மீதான வெறுப்பு நீங்கும். காமாலை கண்டவங்க சூரிய வெளிச்சத்தில் இருப்பது முக்கியம்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

ஒற்றைத் தலைவலி - மைக்ரேன்

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு பொடித்து எடுத்துக்கணும். ஒரு தேக்கரண்டி பொடியில் கால் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

பித்தப்பை கல்லுக்கு

அன்னாசிப் பழச்சாற்றுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

தும்மல், மூக்கடைப்பு

மிளகை ஒரு ஊசியில் குத்தி நல்லெண்ணெயில் முக்கி எரித்தால் ஒரு புகை வரும். அந்தப் புகையை நுகர்ந்தால் தும்மல், மூக்கடைப்பு சரியாகும்.

விரலி மஞ்சளை சுட்டு, அந்தப் புகையை உள்ளிழுத்தால் மூக்கடைப்பு உடனே சரியாகும். மூக்கின் ஒரு துவாரத்தை மூடியபடி புகையை உள் இழுக்கணும்.

தும்பைப்பூ சாறெடுத்து மூக்கில் சில துளிகள் விட்டால் மூக்கடைப்பு சரியாகும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி